மின்சார வாரியம் தொடர்பான பொது மக்களின் புகார்கள் குறித்து ஆய்வு செய்ய மண்டல அளவிலான மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்தப்டுவது வழக்கம்.
அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின், விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம், கடலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் டிசம்பர் 29ஆம் தேதி (வியாழக் கிழமை) காலை 11.30 மணியளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் மின்வாரியத்துறை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் வருகிற 28ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த கூட்டத்திற்கு விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் நேரடியாக கலந்துகொண்டும் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
Must Read : ‘உத்தரவு பெட்டி’... திருப்பூர் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் - சிறப்புகள் என்ன?
மேலும் ,விவரங்களுக்கு 04142-223132, 04142-223969 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனறு விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, TANGEDCO, TNEB, Villupuram