தை முதல் நாள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள இந்நிலையில் மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையாக கொண்டாப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்காக வீடுகளை சுத்தம் செய்யும் பொது மக்கள் வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை சேகரித்து அதனை எரித்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதன்படி அதிகாலையிலேயே கண் விழிக்கும் பொது மக்கள் தாங்கள் பயன்படுத்தி தூக்கி எரிந்த பழைய பொருட்களை எரிந்து போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விழுப்புரம் நகரின் முக்கிய தெருக்களில் அனைத்திலும் பொது மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பழைய பொருட்களை எரிந்து போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி கொண்டாத்தின் காரணமாக துணி, காகிதம், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால் பனிப்பொழிவோடு புகையும் சேர்ந்து விழுப்புரம் நகரம் புகைமூட்டமாக காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போகி பண்டியை அன்று பொது மக்கள் துணிகள், ரப்பர், டயர், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதாக் கண் எரிச்சல், மூச்சு தினறல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படடும் என்றும் எனவே பொது மக்கள் இதனை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: ஆ.குணாநிதி (விழுப்புரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhogi, Local News, Pongal, Pongal 2023, Pongal festival, Tamil News, Villupuram