விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார். இவருடைய இல்லத்தில் ஐயப்ப பக்தர்களுக்கான 10-ஆம் ஆண்டு விளக்கு பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு விளக்கு பூஜை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் ஐய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஐய்யப்ப பக்தர்களுடன் அமர்ந்து அமைச்சர் மஸ்தான் உணவு உண்டார். இதனை தொடர்ந்து யாரும் எதிர்பாரத விதமாக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு ஐயப்ப பக்தர்கள் சார்பில் 1 டன் ஆப்பிள் மாலை அனிவிக்கப்பட்டது.
கிரேன் உதவியுடன் ஒரு டன் ஆப்பிள் மாலை தூக்கப்பட்டு அமைச்சருக்கு அணிவிக்கப்பட்டது. இது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: ஆ.குணாநிதி,விழுப்புரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Apple, Gingee, Minister, Villupuram