பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க
வேலூர் மாவட்டத்தில் 48 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்
வேலூரில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் வரும் 20 அல்லது 21 தேதி திறந்து வைக்க உள்ளார்.
இதன் காரணமாக பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன் ,வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், புதிய பேருந்து நிலையத்தில் விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் மற்றும் பயணிகளின் இருக்கைகள் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது 85 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் வரும் ஒரு வார காலத்திற்குள் முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக பாலாறு மற்றும் கிளை ஆறுகளில் அதிக அளவில் மணல் காணப்படுகிறது. இந்த மணலை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கடத்திச் செல்வதாக புகார்கள் வருகின்றன .
இதையும் படிக்க:
திமுக ஊழல் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
எனவே மணல் திருட்டை தடுக்க வேலூர் மாவட்டத்தில் 48 பேர் கொண்ட 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர்: செல்வம் - வேலூர்
உங்கள் நகரத்திலிருந்து(Vellore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.