வங்கி ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த பெயிண்டரிடம் நூதன முறையில் ரு,40,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம்(47) என்பவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 28-ம் தேதி குடியாத்தம் இந்தியன் வங்கியில் ஏடிஎம் மூலம் பணம் செலுத்துவதற்காக வந்துள்ளார். ஏடிஎம் மூலம் பணம் செலுத்திக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் அறைக்குள் வந்து அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை மாற்றி வேறு போலி ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளார்.
பின்னர் பெயிண்டர் பிரகாசம் என்பவருடைய வங்கி கணக்கில் இருந்து 10,000 ரூபாய் என நான்கு முறை அவர் வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.
ALSO READ | சீசன் முடிந்தும் குற்றாலத்தில் கூடும் கூட்டம்.. அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்!
பின்னர் வழக்கு பதிவு செய்து குடியாத்தம் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபரை தேடி வருகின்றனர். குடியாத்தம் காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் செலுத்துவதோ பணம் எடுப்பதோ தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
குடியாத்தம் செய்தியாளர்: கோபி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.