செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் மோடி வருகையை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார்
செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் மோடி வருகையை எதிர்த்து ரயில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸார்
ராணிபேட்டை- ரயில் மறியல்
சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அரக்கோணம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 20 நிமிடங்கள் ரயில் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.
தமிழகத்தில் துவங்கியுள்ள 44வது செஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதை ஒட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காங்கிரஸ் ஜவஹர் பால் மஞ்ச், மாநிலத் தலைவர் நரேஷ் குமார் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்லும அதிவிரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மோடி ஒழிக கோ பேக் மோடி என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட காங்கிரஸாரை காவல்துறை அப்புறப்படுத்தும் போது காவல்துறைக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் காவல்துறை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக 20 நிமிட நேரம் அதிவிரைவு ரயில் காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.