வேலூர் விருபாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர் ( வயது 45). இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். சங்கருக்கு 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், சங்கரின் மகள் வயிற்று வலியால் துடித்ததால், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். அங்கு அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் இருந்து, வேலூர் சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வேலூர் சமூக நலத்துறையினர் விசாரணை செய்ததில் திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அவரின் தந்தை சங்கர் தான் காரணம் என தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால் வேலூரில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சங்கர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் - செல்வம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrested, Crime News, Father, POCSO case, Vellore