திருச்சி விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்ட டிஆர்ஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி நள்ளிரவு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
மொத்தம் வந்த 31 பயணிகளில், 21 பேர் ரூ. 1.73 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3 கிலோ 150 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவினர் கடத்தலில் ஈடுபட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Trichy Airport