திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இந்த கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகவும் ,துணைத் தலைவராக பணியாற்றி வருபவர் 54 வயதான ஜெயக்குமார். இவர், தனது அதிகாரத்தை பயன்படுத்தி கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சித் துறை மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக தொடர் புகார்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு சில புகார்கள் எழுந்த நிலையில் பேராசிரியர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தன்மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்ததாக தெரிகின்றது. இந்நிலையில், கல்லூரியில் முதுகலை பயிலும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஜெயக்குமார் மீது கடந்த ஜூன் மாதம் மீண்டும் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து புகார் ஒன்றை கல்லூரி முதல்வர் சுகந்தியிடம் கொடுத்துள்ளார்.
ALSO READ | தமிழ்க் கடல் நெல்லை கண்ணன் காலமானார்
இந்நிலையில் பேராசிரியர் ஜெயக்குமார் தனக்கு இருக்கும் ஜாதிய பின்னணி பலத்தை பயன்படுத்தி கல்லூரி நிர்வாகத்தை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அத்துடன் விசாரணை அறிக்கை முடித்து கொடுக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சில மாணவர் அமைப்புகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Periyar, Sexual harassment, Trichy