ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் காவிரியில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், ஆண்டுதோறும் வரும், தை மாத அமாவாசை, ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயபட்ச அமாவாசை ஆகியவை பிரசித்திப் பெற்றவையாக கூறப்படுகிறது. அன்றைய தினம் புனித நீர் நிலைகளில் நீராடி, தங்களது முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர்.
அதன்படி, இன்று ஆடி அமாவாசையையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில், அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானமக்கள் ஒன்று கூடினர். காவிரியில் புனித நீராடி, தங்களது முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.அதேபோல, ஸ்ரீரங்கம் கீதாபுரம் படித்துறை, அய்யாளம்மன் கோயில் படித்துறை, ஓடத்துறை மற்றும் கொள்ளிடம் படித்துறைகளில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வசதிக்காக, மாம்பழச்சாலை- அம்மா மண்டபம் சாலையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் காவல்நிலைய ஆய்வாளர் அரங்கநாதன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காவிரி, இருகரைகள் தொட்டு ஓடுவதால், நீராடும் பக்தர்கள் பாதுகாப்புக்காக ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கரைப் பகுதிகளில் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.