திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருச்சி விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வந்து சேர்ந்த 'ஏர் ஏசியா' விமான பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ஆண் பயணி ஒருவரிடம் இருந்த டேப்லெட் மொபைல் போன் அவர்களுக்கு சந்தேகம் அளிப்பதாக இருந்தது. உடனடியாக, அந்த மொபைல் போனை பிரித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த போனுக்குள், 360 கிராம் தங்கத்தை செவ்வக வடிவில் தகடுகளாக வைத்து அந்த நபர் நூதன முறையில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் இருந்து, 179 கிராம் தங்கச் செயினும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் இருந்து மொத்தமாக சுமார் 539 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 31 லட்சத்து 62 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது. நூதன முறையில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold Robbery, Smuggling, Trichy, Trichy Airport