ஆடி முதல் வெள்ளி.. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பக்தர்கள் வெள்ளம்...
ஆடி முதல் வெள்ளி.. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் பக்தர்கள் வெள்ளம்...
அகிலாண்டேஸ்வரி கோயில்
Thiruvaanaikovil : ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். இங்குள்ள மூலவர் சிவலிங்கத்தை சுற்றி எப்போதும் நீர் ஊற்று எடுத்துக் கொண்டே இருப்பது சிறப்புமிக்க ஒன்று. அதேபோல, தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்மன் இங்கு அருள் பாலிக்கிறார். காலையில் மகாலட்சுமியாகவும், மதியத்தில் துர்க்கையாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் காட்சியளிப்பதாக ஐதீகம்.
ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இன்று, ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, அதிகாலையில் அம்மன் நடை திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அகிலாண்டேஸ்வரி அம்மனை தரிசனம் செய்ய வருகை தந்திருந்தனர். இதேபோல, சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில்களிலும் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.