திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலை கீதாபுரம் அருகே திருச்சி ராணித் தெருவை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் ஓட்டி வந்த கார் வேகமாக சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது ஏறி விபத்துக்குள்ளானது.
நேற்று இரவு நடந்த இந்த கோர சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தனர். மூவரின் பெயர் மற்றும் விவரங்கள் இதுவரை தெரியாத சூழல் உள்ளது.
இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் விபத்து ஏற்படுத்திய லட்சுமி நாராயணன் (வயது 23), அஸ்வந்த் (வயது 21) ஆகிய இரண்டு இளைஞர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.