முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் 10 கி.மீ வரை தொங்க விட்ட டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் 10 கி.மீ வரை தொங்க விட்ட டிரைவர் - அதிர்ச்சி வீடியோ

டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் 10 கி.மீ வரை தொங்க விட்ட டிரைவர்

டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் 10 கி.மீ வரை தொங்க விட்ட டிரைவர்

Viral Video | லாரி டிரைவர் பம்பர் மீது நின்றுகொண்டிருந்த ஊழியருடன் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் லாரியை வேகமாக ஓட்டி சென்றார்.

  • Last Updated :

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றில் பணம் செலுத்தாமல் வேகமாக சென்ற லாரியை நிறுத்த லாரியின் பம்பர் மீது டோல்கேட் ஊழியர் ஏறிய சம்பவம் நடைபெற்றது .

ஆனால் லாரி டிரைவர் பம்பர் மீது நின்றுகொண்டிருந்த ஊழியருடன் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் லாரியை வேகமாக ஓட்டி சென்றார்.

ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு வழியாக சென்று கொண்டிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் குத்தி சமீபத்தில் அமைந்திருக்கும் டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் கடந்து சென்றது. இதனை கவனித்த டோல்கேட் ஊழியர் சீனிவாசலு லாரியின் முன் பக்கம் இருக்கும் பம்பர் மீது ஏறி அதனை நிறுத்த முயன்றார்.

Also Read : செவிலியர் கையிலிருந்து தவறி விழுந்த பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

ஆனால் லாரி டிரைவர் அந்த ஊழியரையும் பொருட்படுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த டோல்கேட்டில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை தொடர்ந்து சென்றனர். லாரி வேகமாக சென்று கொண்டிருந்ததால் உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

top videos

    இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த போலீசார் லாரியை மடக்கி அந்த ஊழியரை மீட்டனர். லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

    First published:

    Tags: Trending Video, Viral Video