இரு சக்கர வாகனம் இருவருக்கே என்று நாடு முழுக்க எத்தனை பேனர்கள் வைத்தாலும் நம் ஊர் இளவட்டங்களுக்கு அது கண்ணுக்கே தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை உதாசீனம் செய்து விட்டு ஒரே பைக்கில் மூன்று பேர் செல்வது நான்கு பேர் அமர்ந்து செல்வது என்று தான் ரகளை செய்வர்.
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் இதையெல்லாம் மிஞ்சி ஒரு வண்டியில் 6 பேர் அமர்ந்து பயணித்துள்ளனர். 3 இருசக்கர வாகனங்களில் 14 பேர் அமர்ந்து ஆபத்தாக பயணித்து ஸ்டண்ட் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
UP | In a viral video, 14 people were seen riding 3 bikes - 6 on one and 4 each on 2 two others - in the Deorania PS area of Bareilly.
SSP Bareilly Akhilesh Kumar Chaurasia says, "Once the information was received, the bikes were seized. Further action is being taken." (10.01) pic.twitter.com/APBbNs4kVi
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 11, 2023
பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் மூன்று பைக்குகளில் ஒரு வண்டியில் 6 பேர், மற்ற இரண்டு வண்டிகளில் தலா 4 பேர் என்று பயணித்துள்ளனர். இதை ஒருவர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அறிக்கைகளின்படி, அவர்கள் ஸ்டண்ட் செய்வதை போலீசார் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இந்த சம்பவம் பரேலியின் தியோரானியா PS பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி பைக்குகளை பறிமுதல் செய்தனர்."தகவல் கிடைத்ததும், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்று மூத்த பரேலி போலீஸ் அதிகாரி அகிலேஷ் குமார் சௌராசியா கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike, Police case, Uttar pradesh