யானை ஒன்று குடிநீருக்காக அடிபம்ப் ஒன்றில், நீண்ட நேரம் அடித்து வெளிவரும் தண்ணீரை குடிக்கும் வீடியோ, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
உலகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகில் இருக்கும் மொத்த நீரில் 3 விழுக்காடு நீர் மட்டுமே குடிக்க உகந்ததாக இருக்கிறது. அவை பெரும்பாலும் நிலத்தடி நீராக இருக்கிறது. விவசாயம், குடிநீர் என அனைத்துக்கும் நிலத்தடி நீரை சார்ந்திருப்பதால், மக்கள் தொகை பெருக்கம், தண்ணீர் சேமிப்பின்மை காரணமாக நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தண்ணீர் பஞ்சம் அனைத்து காலங்களிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கோடை காலங்களில் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றிக் கூறத்தேவையில்லை.
एक हाथी भी #जल की एक-एक #बूंद का महत्व समझता है। फिर हम इंसान क्यों इस अनमोल रत्न को व्यर्थ करते हैं?
आइए, आज इस जानवर से सीख लें और #जल_संरक्षण करें। pic.twitter.com/EhmSLyhtOI
— Ministry of Jal Shakti 🇮🇳 #AmritMahotsav (@MoJSDoWRRDGR) September 3, 2021
தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை சார்பில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் வனப்பகுதியில் தண்ணீர் இல்லாமல், அருகாமையில் இருக்கும் கிராமத்துக்குள் நுழையும் யானை ஒன்று அங்கிருக்கும் அடி பம்ப்பில் தண்ணீரை அடித்துக் குடிக்கிறது. சுமார் 26 நொடிகள் வரை இருக்கும் அந்த வீடியோவில் தாகத்தை போக்க, அவ்வாறு செய்துள்ளது. இந்த வீடியோவுக்கு கேப்சனிட்டுள்ள மத்திய நீர்வளத்துறை, ஒரு சொட்டு நீர் எவ்வளவு முக்கியம் என்பதை யானை அறிந்திருக்கிறது, மனிதர்கள் ஏன் இதனைப் புரிந்து தண்ணீரை சேமிக்கக்கூடாது? தண்ணீரை வீணாக செலவு செய்வதை தவிர்க்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தும் அருமையான விழிப்புணர்வு வீடியோ எனத் தெரிவித்துள்ளனர். யானையின் புத்திக் கூர்மையையும், சமயோசித்தமாக செயல்படும் ஆற்றலையும் பார்த்து வியந்துள்ள நெட்டிசன்கள், அடி பம்பை அடித்தால் தண்ணீர் வரும் என்று யானைக்கு எப்படி தெரியும்? உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது என கமெண்ட் அடித்துள்ளனர். இந்திய வனத்துறை அதிகாரி ரமேஷ் பாண்டேவும் இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, தண்ணீரையும், வினவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Drinking water, Elephant, News On Instagram, Viral Video