அமேசானில் லேப்டாப் ரூ.190-க்கு விற்பனை... ஆர்டரை கேன்சல் செய்ததால் அபராதம்
நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: January 22, 2021, 8:47 PM IST
இ-காமர்ஸ் தளங்களில் விலையுர்ந்த பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்கள் வழங்குவது வழக்கமல்ல. பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் போன்ற ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஆஃபர் வழங்கி வருகின்றனர். அதிலும் ரூ.190-க்கு மட்டும் லேப்டாப் வழங்குவது ஒரு அசாதாரணமான ஒன்று தான்.
கடந்த 2014-ம் ஆண்டு ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் அமேசானில் இப்படியொரு சலுகையை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார். அவரது படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு லேப்டாப் தேவைப்பட்டதால் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் அதனை அமோசன் ரத்து செய்துவிட்டதாக சுப்ரியாவிற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதை பார்த்த அவர் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் செய்து விசாரித்து உள்ளார். பல முறை உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு காரணமாக விலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே லேப்டாப் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சட்டக்கல்லூரி மாணவர் சுப்ரியா மற்றொரு லேப்டாபை ஆர்டர் செய்துள்ளார். அதுவும் உரிய நேரத்தில் அவரிடம் கிடைக்காத காரணத்தால் கல்லூரி பாடத்திட்டத்தை சமர்பிக்க தாமதமாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை மாணவர் விடாமல் ஒரிசா மாநில நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவரின் நீண்ட நாள் போராட்த்திற்கு பலன் தற்போது கிடைத்துள்ளது. நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.40,000 மற்றும் கூடுதலாக வழக்கு செலவு மற்றும் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஒரிசாவை சேர்ந்த சுப்ரியா ரஞ்சன் என்ற சட்டக்கல்லூரி மாணவர் அமேசானில் இப்படியொரு சலுகையை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளார். அவரது படிப்பு சார்ந்த விஷயங்களுக்கு லேப்டாப் தேவைப்பட்டதால் ரூ.190-க்கு அறிவிக்கப்பட்ட லேப்டாப்பை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
ஆனால் ஆர்டர் உறுதிப்படுத்தப்பட்ட சில நிமிடங்களில் அதனை அமோசன் ரத்து செய்துவிட்டதாக சுப்ரியாவிற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதை பார்த்த அவர் கஸ்டமர் சர்வீஸ்க்கு போன் செய்து விசாரித்து உள்ளார். பல முறை உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் தொழில்நுட்ப ரீதியில் கோளாறு காரணமாக விலையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன் காரணமாகவே லேப்டாப் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக விளக்கம் பெறப்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரி மாணவரின் நீண்ட நாள் போராட்த்திற்கு பலன் தற்போது கிடைத்துள்ளது. நிதி மோசடி மற்றும் உளவியல் துன்புறத்தலுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென அமோசன் நிறுவனத்திற்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இழப்பீட்டு தொகையாக ரூ.40,000 மற்றும் கூடுதலாக வழக்கு செலவு மற்றும் வாடிக்கையாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.