கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கும்ப்லாவில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் சுமார் 70 ஆண்டுகள் வெறும் கோவிலில் தரும் பிரசாதங்களான சாதம் மற்றும் வெல்லத்தை மட்டும் சாப்பிட்டு முதலை ஒன்று வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.
முதலைக்கு பாபியா என்று பெயரிடப்பட்டு அழைத்து வரப்பட்டது. பாபியா முதலை கோவிலுக்கு எப்படி வந்தது சரியாகத் தெரியாத நிலையில் 1945க்கு மேல் வந்ததாகக் கூறப்படுகிறது. கோவிலில் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த முதலை இறந்ததையடுத்து ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் ஊர் மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முறைப்படி முதலைக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.
Devotees turn up to pay their last respects to Babiya.
For over seven decades at Ananthapura Lake Temple, Babiya was the cynosure of all eyes.
PS: The second photo was inadvertently attributed to Babiya in the previous tweet.@LostTemple7 https://t.co/FbBUhGVgsN pic.twitter.com/iGtwL7PJ4K
— Shobha Karandlaje (@ShobhaBJP) October 10, 2022
கோவில் குருக்களுக்கு மிகவும் பிரியமான பாபியா முதலையின் பிரிவு மிகவும் சோகம் அளிப்பதாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் பாபியா முதலைக்கு இரண்டு முறை கோவில் குருக்கள் பூஜை பிரசாதத்தை வழங்கி வந்துள்ளனர். மேலும் முதலைக்கு மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே இறங்கல் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.