முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பிரபல மாலில் நாயுடன் இளைஞர் உடலுறவு செய்து கொடூரம்.. வீடியோ பரவியதால் கைது

பிரபல மாலில் நாயுடன் இளைஞர் உடலுறவு செய்து கொடூரம்.. வீடியோ பரவியதால் கைது

நாய்

நாய்

பிரபல மால் ஒன்றில் 28 வயதான உணவு டெலிவரி பாய் ஒருவர் நாய் உடன் உடலுறவு கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மும்பையின் போவாய் பகுதியில் பிரபல மால் ஒன்று செயல்பட்டுள்ளது. இந்த மாலில் உணவு வசதி கொண்ட பாரில் வெளிப்புற பால்கனி வளாகத்தில் 6 மாத நாயுடன் உணவு டெலிவரி பாய்  ஒருவர் உடலுறவு செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை சக உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் எடுத்து வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ குறித்து போவாய் காவல் நிலையத்தில் விலங்குகள் உரிமை அமைப்பின் தலைவர் விஜய் மொஹானி அனுப்பிய வீடியோ ஆதாரத்தின் மூலம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்மந்தப்பட்ட இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விஜய் மொஹானி கூறுகையில், இந்த சம்பவத்தால் நான் மிகவும் மனவேதனை அடைந்தேன். நாய்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அந்தரங்க உறுப்புகளில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இது போவாய் பகுதியில் நடைபெறும் இரண்டாவது சம்பவம். கடந்த ஆண்டு இதே இடத்தில் நூரி என்ற நாயை பலாத்காரம் செய்தது மட்டுமின்றி அந்த நாயின் அந்தரங்கத்தில் குச்சியை செருகி பலாத்காரம் செய்யப்பட்டது என்று வேதனையுடன் கூறினார்.

Also Read : மஞ்சள், சிவப்பு நிறங்களைச் சேர்த்துப் பார்த்தால் பசிக்கும்! ஏன் தெரியுமா?

போவாய் பகுதி போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து, ஐபிசி பிரிவு 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்) மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960ன் கீழ் அவரை கைது செய்துள்ளோம்.குற்றம் சாட்டப்பட்டவர் இன்று பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், மேலும் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

உணவு டெலிவரி வேலை பார்த்து வந்த நபர் தனது வீணற்ற செயலால் தற்போது வாழ்க்கையை இழந்து கம்பி எண்ணும் சோக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

First published:

Tags: Trends, Viral