திருவாரூர்: போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது...
திருவாரூர்: போதையில் காவலரின் கழுத்தை அறுத்த இளைஞர் கைது...
குற்றவாளி சூர்யா
போதையில் பட்டாகத்தியுடன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞர் தன்னை கண்டிக்க வந்த காவலரின் கழுத்தை அறுத்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் ஹரித்துவாரமங்கலம் கடை வீதியில் ஹரித்துவாரமங்கலம் மேல காலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதான சூர்யா என்கிற இளைஞர் போதையில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சூர்யா கடை வீதியில் நடுவில் நின்று கொண்டு பட்டா கத்தியுடன் அந்த வழியாக வரும் வாகனங்களை மறித்து ரகலையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவர் ஹரித்துவாரமங்கலம் கடைவீதியில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து சூர்யாவின் அலப்பறையை தாங்க முடியாத அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து ஹரித்துவாரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பட்டாகத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட போதை இளைஞர் சூர்யாவை கண்டித்து பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார்.
இதனால் கோபமடைந்த போதை இளைஞர் சூர்யா கையில் வைத்திருந்த பட்டா கத்தியால் காவலர் மணிகண்டனின் கழுத்தை அறுத்து உள்ளார். அதனைத் தொடர்ந்து போதையில் இருந்த சூர்யா அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி இருக்கிறான். இதனையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் கழுத்து அறுபட்ட நிலையில் இருந்த காவலர் மணிகண்டனை மீட்டு உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கண்டிக்க வந்த காவலர் மணிகண்டன் கழுத்து அறுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய போதை இளைஞர் சூர்யாவையும் தேடி வந்தனர்.
மேலும் இது குறித்து அரித்துவாரமங்கலம் கடைவீதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் போதை இளைஞர் சூர்யா பட்டா கத்தியுடன் வலம் வருவது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தற்போது சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துதல் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அரித்துவாரமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.