திருவாரூர் மன்னார்குடியில் சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் மன்னார்குடியில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்குடி நகர் பகுதியில் உள்ள மன்னை நகர் என்ற இடத்தில் உள்ள சலூன் கடை ஒன்றில் போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர். சலூன் கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ள பான் மசாலா மற்றும் குட்கா உள்ளிட்டவை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் குட்கா விற்பனை செய்த ஹாஜா மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
Read More : ஆற்று நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு.. கரூர் அருகே சோகம்.!
சலூன் கடையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : ராஜசேகர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Ganja, Thiruvarur