வலங்கைமானில் தவறான உறவால் பிறந்த சிசுவை உயிருடன் புதைத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேடம்பூர் தோப்புத் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மூத்த மகள் ரேணுகா என்பவருக்கும் நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி மூன்று வருடங்களுக்கு பிறகு கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முத்து பிரிந்து சென்று திருப்பூரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ரேணுகாவிற்கும் முத்துவிற்கும் இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் ரேணுகா தனது தாய் வீட்டில் தங்கி குடவாசலில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.இந்த நிலையில் கமலேஷ் என்பவருக்கும் ரேணுகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் ரேணுகா கர்ப்பமாகி உள்ளார்.இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேணுகாவிற்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தையை தாய் ரேணுகா தனது வீட்டில் பின்புறத்தில் உயிருடன் புதைத்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து நேற்று வலங்கைமான் காவல்துறையினர் வலங்கைமான் வட்டாட்சியர் சந்தான கோபாலகிருஷ்ணன் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் ரவீந்திர பாபு முன்னிலையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி குழந்தையை வெளியில் எடுத்து சம்பவ இடத்திலேயே உடற் கூறாய்வு செய்தனர்.இது குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தாய் ரேணுகா மற்றும் பட்டி ரேவதி ஆகியோரே தேடி வந்தனர்.
இந்த நிலையில், தாய் ரேணுகா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா ரேவதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பி றந்து சில நாட்களே ஆன குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.