திருவாரூர் குடவாசல் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்ற பொழுது பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் வர்ஷினி (16) என்கிற மாணவி.
இவர் இன்று பள்ளி இடைவேளையின் போது கழிவறை சென்றுள்ளார். அப்போது கழிவறையில் இருந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக மாணவியின் காலில் கடித்தது. இதனை உணர்ந்த பள்ளி மாணவி சத்தம் போட்டு கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அருகில் இருந்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வர்ஷினியை சக மாணவிகளும் ஆசிரியர்களும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குடவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்தில் விஷப்பாம்பு மாணவியை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ராஜசேகர், செய்தியாளர், திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Girl students, School, Snake