வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று இலங்கை பகுதியில் கரையை கடந்தது.
இந்த நிலையில் இதன் தாக்கத்தின் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் நாளை ( 03-02-2023) ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, School Holiday, School Leave, Tamil News, Thiruvarur