திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவியின் கன்னத்தில் தீக்குச்சியால் சூடு வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு கெடாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முனியன் என்பவரின் 9 வயது மகள் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக உஷாராணி என்பவர் பணியாற்றி வருகின்றார்.
இவர் சம்பவத்தன்று மாணவி சரிவர படிக்கவில்லை என கூறி தீக்குச்சியை பற்றவைத்து மாணவியின் கன்னத்தில் சூடு வைத்துள்ளார். இதனால் மாணவியின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மணிமேகலை, பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மணிமேகலை கிராம பொதுமக்கள் உதவியுடன் நேற்று முன்தினம் மங்கலம் போலீஸ் நிலையத்தில் மகளின் கன்னத்தில் சூடு வைத்த பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் தலைமை ஆசிரியையை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க | திருவண்ணாமலையில் இன்றுடன் நிறைவடையும் கார்த்திகை தீபம்.. பக்தர்கள் தரிசனம்!
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியை உஷாராணிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் 108 ஆம்புலன்சு மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான பள்ளிக்கல்வி துறை அலுவலர்கள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணியை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, School student, Tiruvannamalai