முகப்பு /செய்தி /திருவண்ணாமலை / திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. சிசிடிவியில் சிக்கிய சுமோ.. ஆந்திரா விரைந்தது தனிப்படை போலீஸ்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை.. சிசிடிவியில் சிக்கிய சுமோ.. ஆந்திரா விரைந்தது தனிப்படை போலீஸ்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை

Tiruvannamalai ATM theft | வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruvannamalai | Tiruvannamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் நள்ளிரவில் அடுத்தடுத்து நான்கு ஏடிஎம் மையங்களில் 72 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்தவர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் மூன்று ஏடிஎம் மையம் மற்றும் ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்தது. ஏடிஎம் மையத்தின் ஷட்டரை மூடிவிட்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள், கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்தனர்.

இதில், திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 19,50,000  ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோன்று, திருவண்ணாமலை நகர எல்லைக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனிமலை எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இருந்து 32,00,000 லட்சம் கொள்ளை போனது.

மேலும், திருவண்ணாமலை நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தொலைவில் கலசபாக்கத்தில் உள்ள ஒன்இந்தியா ஏடிஎம் மையத்தில் 3,00,000  ரூபாயும், திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் போளூரில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 18,00,000 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டது.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் நான்கு ஏடிஎம் மையங்களில் இருந்து மொத்தம் 72,50,000 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. பணத்தை கொள்ளையடித்த பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்ததுடன், ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் எரிந்ததால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு சவால் ஏற்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த 4 எடிஎம் மையங்களும் ஆந்திர மாநிலம் செல்லும் வழியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் 6 தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேலூர் வழியாக ஆந்திரா செல்லும் சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் காலை முதல் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்குகிடமான வகையில் வரும் வாகனங்கள் மற்றும் ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி முழுமையாக சோதனை செய்த பின் அனுமதிக்கின்றனர்.

First published:

Tags: ATM, Crime News, Local News, Theft, Tiruvannamalai