மதிய உணவு மற்றும் சத்து மாத்திரை சாப்பிட்ட 43 மாணவ-மாணவிகளுக்கு வயிற்று வலி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த படிஅக்ரஹாரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 175 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான 61 மாணவ-மாணவிகளுக்கு காலை 11:30 மணிக்கு சத்து மாத்திரை (சிங்க் மாத்திரை) வழங்கியுள்ளனர். பின்னர் அதே பள்ளியில் மதிய உணவாக சத்துணவு மற்றும் முட்டை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சத்து மாத்திரை மற்றும் சத்துணவு சாப்பிட்ட 19 மாணவர்கள், 24 மாணவிகள் என 43 பேருக்கு தலை சுற்றல், வயிற்று வலி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைத்து மாணவ மாணவிகளையும் காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் மாணவ மாணவிகளுக்கு எவ்வாறு உடல் உபாதைகள் ஏற்பட்டது என மருத்துவர்கள் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Tiruvannamalai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.