திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று திருக்கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. அதேபோல் சந்திரசேகரருக்கு வெண்பட்டு உடுத்தி, கற்கள் பதித்த ஆபரணங்கள் சூட்டி, வண்ண வண்ண மலர்களைக் கொண்டு மலர் மாலைகள் சூட்டப்பட்டு, பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் திருக்கோவிலை வலம் வந்து ராஜகோபுரம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அதன் பின்னர் ஐந்து குடைகள் கூடிய தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும், மூசிக வாகனத்தில் விநாயகரும் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
Also see...கார்த்திகை தீபத்திருவிழா...சுவாமிமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது
அதனைத் தொடர்ந்து வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Thiruvannamalai