திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான ஸ்ரீ பாலகுஜாம்பிகை வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 2005ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில்
17 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழக்கு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 66 யாக சாலைகள் அமைத்து 200க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க சிவ வாத்தியம் ஒலிக்க சுமார் 200 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் மீது உள்ள கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் கொண்டு வந்த புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். அதனைத் தொடர்ந்து ராஜ கோபுரத்தின் மீதுள்ள கலசத்திற்கு கற்பூர தீபாராதனை காண்பித்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் செய்யாறு மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கும்பாபிஷேக தீர்த்தத்தை சிறிய ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாநில மருத்துவ அணி தலைவர் கம்பன், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.