திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே கிரிக்கெட் போட்டியால் 2 கிராமங்கள் இடையே மோதல் வெடித்த நிலையில், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பக்கத்து கிராமமான சோழியம்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த விவகாரம் முற்றியதில் இரவில் இருதரப்பும் மதுபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அப்பகுதியே போர்க்களமானது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தாமல் உள்ளதாக இரு தரப்பு மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் வரப்பெற்றும் நடவடிக்கை எடுக்காமல் இருதரப்பையும் அழைத்து சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Fight, Local News, Thiruvallur