டாஸ்மாக் கடையில் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்ததோடு அல்லாமல் கடையிலேயே அமர்ந்து மதுவை அருந்திகொண்டிருந்த கொள்ளையர்களை காவல்துறையினர் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த தண்டலச்சேரியில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் விற்பனையாளர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றிருந்தார். நள்ளிரவில் கவரைப்பேட்டை போலீசார் ரோந்து பணியின் போது கடை அருகே சென்று பார்த்தனர். அப்போது கடையின் சுவற்றை துளையிட்டு உள்ளே மர்ம நபர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தை சேர்ந்த முனியன் என்பது தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் டாஸ்மாக் கடையின் சுவற்றைத் துளையிட்டு கல்லா பெட்டியில் வைத்திருந்த 14,000 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடியது தெரியவந்தது. மேலும் மதுபாட்டில்களையும், திருடி செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கவரைப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். டாஸ்மாக் கடையில் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை அடிக்க முயன்றவர்கள் சாவகாசமாக மது அருந்திய போது போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : பார்த்தசாரதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tasmac, Thiruvallur