முகப்பு /செய்தி /திருவள்ளூர் / கீழச்சேரி பள்ளி மாணவி மரண வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

கீழச்சேரி பள்ளி மாணவி மரண வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைப்பு

மாணவி மரணம் - போலீஸ் குவிப்பு

மாணவி மரணம் - போலீஸ் குவிப்பு

கீழச்சேரி பள்ளி மாணவி விடுதியில் தூக்கிட்ட நிலையில்  உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thiruvallur (Tiruvallur)

கீழச்சேரி பள்ளி மாணவி விடுதியில் தூக்கிட்ட நிலையில்  உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்பட்டு வரும்  சாக்ரீட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  பள்ளிக்கு சொந்தமான செயின்ட்-ஆன்ஸ் ஹோம் ஃபார் சில்ட்ரன் தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று விடுதியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார்  உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியின் மரணம் தொடர்பாக  உண்மை தன்மை வேண்டும் என்று  உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள்  தெக்கலூர் கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மாநில நெடுஞ்சாலையில் புறப்பட்டனர். இவர்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆகியோர்கள் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகில் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பள்ளி விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை.. திருவள்ளூரில் சோகம்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில், பள்ளி மாணவர்களின் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: பார்த்தசாரதி-  திருவள்ளூர்

First published:

Tags: Girl dead, Thiruvallur