திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வாஸ்து படி வீட்டை இடித்து கட்ட முயன்றவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி மேலாண்டை தெருவைச் சேர்ந்தவர் 47 வயதான செல்வம். வாஸ்து பிரகாரம் வீட்டை சீரமைக்க ஏற்கனவே கட்டியிருந்த வீட்டை கடப்பரை கொண்டு இடித்தார். வீட்டின் ஒருபகுதியை இடித்த போது மேலே இருந்த சிலாப் விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்: சசிக்குமார், திருவள்ளூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Death, Local News, Thiruvallur