முகப்பு /செய்தி /திருவள்ளூர் / பள்ளி விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை.. திருவள்ளூரில் சோகம்

பள்ளி விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை.. திருவள்ளூரில் சோகம்

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திருவள்ளூரில்  பிளஸ்2 மாணவி பள்ளி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்தணி தெக்கலூர் காலனியை சேர்ந்த மாணவி, கீழச்சேரியில் செயல்பட்டு வரும்  சாக்ரீட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  பள்ளிக்கு சொந்தமான செயின்ட்-ஆன்ஸ் ஹோம் ஃபார் சில்ட்ரன் தனியார் விடுதியில் மாணவி தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று விடுதியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார்  உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: நீ ராசியில்லாதவள்.. வார்த்தைகளால் துளைத்த மாமியார் - என் சாவுக்கு மாமியார்தான் காரணம் என ஆடியோ பதிவிட்டு கர்ப்பிணி தற்கொலை

பாதுகாப்பு கருதி போலீசார் மாணவியின் சொந்த ஊரான தெக்கலூர் காலனியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தடுப்புகளை ஏற்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்து சில நாட்கள் கூட ஆகாத நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இது போன்ற ஒரு சம்பவம் ஏற்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,

செய்தியாளர்: பார்த்தசாரதி-  திருவள்ளூர்

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Girl dead, School student, Thiruvallur