திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தை சேர்ந்தவர் கல்யாணி(60). கணவனை இழந்தவர். இவரது இளைய மகள் கஸ்தூரியின் கணவன் குப்பன் (எ) குப்புசாமி(47). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கஸ்தூரிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக கஸ்தூரி வழக்கம்போல் தனது தாய் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை அழைத்துச் செல்வதற்காக குப்பன் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அப்போது குப்பனுக்கும், கல்யாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குப்பன் கல்யாணியை வீட்டில் சமையலறையில் இருந்த கத்தியால் முதுகு மற்றும் கையில் குத்தியுள்ளார். இதில் கல்யாணி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த கும்மிடிப்பூண்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் மாமியாரை கொலை செய்த குப்பன் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : பார்த்தசாரதி - திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Thiruvallur