திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஐய்யர் கண்டிகை கிராமத்தில் ஏ ஆர் ரகுமானின் பண்ணை வீட்டில் அமைந்த ஏ.ஆர்.ஆர் பிலிம் சிட்டியில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டனமல்லி ஊராட்சி, ஐய்யர் கண்டிகை கிராமத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் ஏ.ஆர்,ஆர் ஃபிலிம் ஸ்டுடியோ உள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ‘வெப்பன்’ திரைப்படம் எடுப்பதற்காக பணியாளர்கள் இரண்டு நாள் முழுவதும் ஃபிலிம் ஸ்டுடியோவில் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த குமார் (47) என்பவர் கேமரா மேன் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதை அறிந்த சக ஊழியர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.