திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆலந்தூர் கிராமத்தில் நேற்று 100 நாள் பணியில் பள்ளம் தோண்டியபோது, ராக்கெட் லாஞ்சர் ரக வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வெடிகுண்டு நிபணர்கள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஆவாஜிப்பேட்டை கிராமத்தில் விவசாயி ஒருவர் காலி மைதானத்தில் மாடு கட்டுவதற்காக கூர்மையான மரத்துண்டை நட்டபோது, இரும்பு பொருள் தென்பட்டுள்ளது. அது வெடிகுண்டு இருக்கலாமென சந்தேகம் வரவே, அப்பகுதி மக்கள் பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் மணலை கொட்டி வெடிகுண்டை செயலிழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளித்தனர்.
மேலும், மாளந்தூர் மற்றும் ஆவாஜிப்பேட்டை பகுதிகளில் ஆங்கிலேயர்கள் படை பிரிவுகளுடன் தங்கி இருந்ததாகவும், இந்த ஊரில் இரண்டாம் உலகப்போரின்போது குண்டு வீசி பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த பகுதியில் அதிக அளவு இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இருக்கும் என்று தெரிவிக்கும் கிராம மக்கள் மெட்ராஸ் உருவாகுவதற்கு முன்பே ஆங்கிலேயர்கள் இந்த பகுதியில் பல போர்களை நடத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
சிற்றரசர்களை எதிர்கொள்ள இப்பகுதியில் மிகப்பெரிய கண்காணிப்பு கோபுரம் ஒன்றை அது இன்று வரை சிதிலமடையாமல் இங்குள்ள வனப்பகுதியில் பிரமாண்டமாய் நிற்கிறது.
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஆய்வுகள் மேற்கொண்டு வெடிகுண்டுகள் வெடி பொருட்கள் உள்ளனவா என்று சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூரில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் சிக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : பார்த்தசாரதி - திருவள்ளூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Thiruvallur