திருப்பூரில் நேற்று மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு ஐந்து சவரன் நகை கொள்ளை அடிக்க பட்ட வழக்கில் சேலத்தை சேர்ந்த நபர் கைது.
திருப்பூர் எஸ்.வி காலனி., டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்த முத்துசாமி அவரதி மனைவி சந்திராமணி 67 .இருவரும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் சந்திரமணி வீட்டின் முன் பக்க கேட்டை திறந்து வைத்துவிட்டு, சமயலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சந்திராமணி நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது கணவர் முத்துசாமி சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, கழுத்தறுத்து இரத்த வெள்ளத்தில் சந்திராமணி சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து பொது மக்கள் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி காட்சிகளை பார்த்த போது. 60 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டிற்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியேறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.
Also Read: ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி.. கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி
இதையடுத்து உயிரிழந்த மூதாட்டியின் கணவர் முத்துசாமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் , வீட்டிற்குள் வந்து சென்றது தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் என்பதும் தெரியவந்தது. கடந்த சில நாட்களாக முத்துசாமியிடம் பேசி பழகி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து சந்திராமணியை கழுத்தை அறுத்து கொலை செய்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பரித்து சென்றதை உறுதி செய்த போலீசார் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி ஆறுமுகத்தை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில். அவர் சேலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அடுத்து போலீசார் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வீட்டில் இருந்த ஆறுமுகத்தை கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொலைக்கான காரணம் என்ன? இந்த கொலை சம்பவத்தில் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Murder, Tamil News, Tirupur