முகப்பு /செய்தி /திருப்பூர் / WATCH - வங்கிக்குள் புகுந்த பர்தா திருடன்.. துண்டால் சுருட்டி தூக்கி அடித்த முதியவர்!

WATCH - வங்கிக்குள் புகுந்த பர்தா திருடன்.. துண்டால் சுருட்டி தூக்கி அடித்த முதியவர்!

திருப்பூர் வங்கி கொள்ளை

திருப்பூர் வங்கி கொள்ளை

தனது துண்டை வைத்து லாவகமாக பர்தா திருடனை பிடித்த விவசாயி கருணாகரனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் சனிக்கிழமை அன்று திருட முயற்சித்த நபரை பொதுமக்களே பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை திருப்பூர் மாவட்டம் கனரா வங்கியில் பர்தா அணிந்து கொண்டு வங்கியில் நுழைந்த நபர் ஒருவர் தன்னிடம் துப்பாக்கி மற்றும் டைம் பாம் இருப்பதாக கூறி அதை காண்பித்து வங்கியில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதை பார்த்த மக்கள் அந்த நபரிடம் துப்பாக்கி மற்றும் பாம் இருப்பதாக கூறியாதால் ஒதுங்கி நின்றனர்.

சிறிது நேரத்தில் அந்த பர்தா திருடன் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. அதை எடுக்க முயற்சித்த போது, அருகிலிருந்த முதியவர் சாமர்த்தியமாக தனது துண்டை வைத்து அவரை மடக்கி பிடித்து சுவரை ஒட்டி அவரை அழைத்து சென்று பிடித்தார். அவர் பிடித்த உடன் பொதுமக்களும் அவருக்கு உதவி செய்து அந்த பர்தா திருடனை பிடித்தனர். பின்னர் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கியதில் அது பொம்மை துப்பாக்கி என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த டைம் பாமும் போலி என்பதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கிவிட்டு போலீசாருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பர்தா அணிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(19) என்பதும் அவர் பாலிடெக்னிக் 2ஆம் ஆண்டு பயிலும் மாணவர் என்பதும் தெரியவந்தது. மேலும், அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய பர்தா, முகமூடி, பொம்மை துப்பாக்கி, டைம்பாம் என அனைத்தையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

' isDesktop="true" id="885828" youtubeid="aiWWn-ey8_o" category="tiruppur">

பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த சுரேஷை மருத்துவமனைக்கு அழைத்து சென்று போலிசார் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் அந்த திருடன் வங்கியில் நுழைந்த உடன் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிவிட்டு வங்கி வாடிக்கையாளர்களை ஓரமாக உட்கார சொல்லி எச்சரிப்பதும், அப்போது அவரின் கையில் இருந்த கத்தி கீழே விழுந்த போது 58 வயது விவசாயியான கருணாகரன், தான் வைத்திருந்த துண்டால் அவரை மடக்கி பிடித்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

First published:

Tags: Bank, Theft, Tiruppur