முகப்பு /செய்தி /திருப்பூர் / தமிழர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்புகள்..!

தமிழர்களை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்... ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைப்புகள்..!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முற்றுகை

சிகரெட் புகைக்கும்போது ஏற்பட்ட தகராறால் தமிழக தொழிலாளர்களும் வடமாநில தொழிலாளர்களும் ஒருவரைக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruppur, India

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அருகே உள்ள திலகர் நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. சிகரெட் புகைக்கும் போது ஏற்பட்ட தகராறால் தமிழக தொழிலாளர்களும் வடமாநில தொழிலாளர்களும் ஒருவரைக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் அந்த சம்பவம் நடைபெற்ற திலகர் நகர் பகுதியில் நேற்று தமிழக தொழிலாளர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தினர், உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் இணைந்து வட மாநில தொழிலாளர்களின் அத்து மீறிய செயலை கண்டித்து திலகர் நகர் பகுதியில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனிடையே தமிழ் தொழிலாளர்களை தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 200க்கும் மேற்பட்ட தமிழ் தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

First published:

Tags: Migrant workers, Migrants