திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று செவ்வாய்க்கிழமை (11-ம் தேதி) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Heavy rain, School Leave