நெல்லையில் மன நலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் நான்கு மாத குழந்தையுடன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் அருகே உள்ள கும்மிகுளத்தை சேர்ந்த கண்ணன்- வளர்மதி தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளது. கண்ணனின் மனைவி வளர்மதி சற்று வளர்மதி சற்று மன நலம் பாதிக்க பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 3 தினங்களுக்கு முன்பாக அவர் வீட்டில் இருந்து காணாமல் போனதாக ராதாபுரம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
புகாரின் அடிப்படையில் ராதாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். மேலும் பல்வேறு சமூக வலைதளங்களிலும் இருவர் குறித்து காணவில்லை என தகவல்கள் பகிரப்பட்டு வந்தது . இதனிடைய இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் குழந்தையின் உடலும் வளர்மதி உடலும் மிதப்பதை பார்த்து ராதாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வள்ளியூர் தீயணைப்பு துறையினர் இருவரது உடலையும் மீட்டுள்ளனர். மேலும் ராதாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கல்குவாரி குட்டையில் விழுந்து தற்கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli