நெல்லை அருகே பேட்டை அபிஷேகப்பட்டியை சேர்ந்த 63 வயதான ஜேக்கப் ஆனந்தராஜ், பில்டிங் காண்ட்ராக்டராக உள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி நெல்லை டவுன் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது பேத்தியை அழைத்து செல்வதற்காக காரில் வந்துள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினர் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து போலீசார் ஜேக்கப் மாயமானதாக கூறி வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நெல்லை பேட்டை ரயில் நிலையம் அருகே புனை வெங்கப்பன் குளத்தின் மதகு கரையொட்டி சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த காவல்துறை துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் காணாமல் போன முதியவருக்கும் இவருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணையை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஜேக்கப் ஆனந்தராஜ் கார் சுத்தமல்லி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. போலீசார் காரை கைப்பற்றியதுடன் உயிரிழந்தது ஜேக்கப் ஆனந்தராஜ் என்பதையும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து தடயங்களை சேகரிக்கும் பணியையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து ஜேக்கப் ஆனந்தராஜ் உடல் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். முதியவர் கடத்தி கொலை செய்யப்பட்டரா எதற்காக இந்த கொலை சம்பவம் அரங்கேறியது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Murder, Tamil News