நெல்லையில் சுவர் ஏறி குதித்து பல பெண்களை ஆபாசமாக படம் எடுத்த வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலிசாாிடம் ஒப்படைப்பு. ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ராஜேந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பால் ராபின்சன். இவர் பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட காலனி பகுதியில் அடிக்கடி சென்று வீட்டின் சுவர் ஏறி குதித்து பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வந்துள்ளார். சமீபகாலமாக காலனி பகுதியில் திருடர்கள் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியினர் சந்தேகத்தில் இருந்தனர்.
இந்நிலையில் புதன் கிழமை இரவு வழக்கம்போல் பால் ராபின்சன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை படம் எடுத்துள்ளார். எதிர்பாராதவிதமாக அதை கவனித்த அந்தப் பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டைச்சுற்றி தேடுதல் நடத்தினர். அப்பொழுது சுவர் ஏறி குதித்த பால் ராபின்சன் அருகிலுள்ள பூங்காவில் மறைந்து கொண்டார். இதனை கவனித்த அப்பகுதி இளைஞர்கள் அவரை பிடித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
Also Read: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை நிர்வாணப்படுத்தி வெளுத்து வாங்கிய பொதுமக்கள்
போலீசாரின் விசாரணையில் பால் ராபின்சன் இதுபோன்று பல நாட்கள் பெண்களை வீடியோ மற்றும் போட்டோ எடுத்தது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதிலுள்ள காட்சிகளை வைத்தும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரிலும், பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாச செயல்களை புரிதல், ஆயுதங்களை பயன்படுத்தி ஒருவரை தாக்குதல், ஒருவரின் அந்தரங்க பகுதியை அவருக்குத் தெரியாமல் படம் எடுத்தது அதை வெளியிடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அரசு ஊழியர்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் பெருமாள்புரம் பகுதியில் இப்படி ஒருவர் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் வீடியோ எடுப்பதற்காக மட்டும் இவர் சென்றாரா அல்லது வேறு நகை பறிப்பு சம்பவங்களில் ஏதேனும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: ஐயப்பன் (திருநெல்வேலி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Nellai, Photo, Tamil News, Videos