தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பெண் ஊழியர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் பிரதான ரயில்வே கேட் பகுதியில் கடந்த 16ஆம் தேதி இரவில் ரயில்வே பெண் ஊழியர் பணியில் இருந்தபோது அவரிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ரயில்வே இருப்புப் பாதை காவல் துறையினர் மூன்று நாட்களுக்குப் பிறகு கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனீஸ் (35) என்ற குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ரயில்வே ஊழியர் அவரது கணவர் இருவரும் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், சுகுமாரன் சுந்தர் தனது மனைவி 15 நிமிடம் நடைபெற்ற போராட்டத்தில் வெற்றி பெற்றிருப்பதாகவும் எந்தச் சூழ்நிலையிலும் பாலியல் இச்சைக்கு அணுகவிடாமல் அந்த நபரிடம் தனது மனைவி போராடி உள்ளதாக தெரிவித்தார்.
தனது மனைவியின் துணிச்சலான போராட்டத்தால் கோபமடைந்த அந்த நபர் தனது மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்றும் சாவின் விளிம்பிற்கே சென்று தனது மனைவி பிழைத்துள்ளார் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற பின்பு ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இருப்புப் பாதை காவல் துறையினர் தமிழ்நாடு காவல்துறையினர் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
கேரள ஊடகங்கள் உட்பட அனைவரும் அவர் பாதிக்கப்பட்டதை மட்டுமே சொல்லுவதாகவும் ஆனால் தனது மனைவி மிகப் பெரிய போரில் போராடி வீரமாக வெற்றி பெற்றுள்ளார் என்பதை தெரியப்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னைத் தவிர வேறு யாரும் தனக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதை பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய பாதிக்கப்பட்ட ரயில்வே பெண் ஊழியர்,பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த நபர் தன்னிடம் முழுமையாக தமிழில் மட்டுமே பேசியதாகவும் அதன் மேல் சட்டை அணியாமல் காக்கி நிறம் கால் சட்டை மட்டும் அணிந்து கொண்டு அந்த நபர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். எனினும் தான் முடிந்த அளவு அவரிடம் போராடி வெற்றி பெற்றுள்ளேன் என்று குறிப்பிட்ட பெண், தன்னை பாதிக்கப்பட்ட பெண்ணாகவே ஊடகங்கள் சித்தரிப்பதாக வேதனை தெரிவித்தார்.
அதைவிட ஒரு பெண்ணாக எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பெண்களின் போராட்டம் குறித்தும் அனைத்து ஊடகங்களும் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தணாபுரம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பது பின்னர் தான் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேரள ஊடகங்களும்கூட தமிழ்நாட்டில் கேரள பெண் பாதிக்கப்பட்டு விட்டதாகவே தன்னை சித்தரித்ததாகவும் ஆனால் தனது போராட்டத்தைப் பற்றியும் தான் போராடி வெற்றி பெற்றதைப் பற்றியும் யாரும் குறிப்பிடவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli