நெல்லை மாவட்டம் மேலச்செவல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(55). இவர் அப்பகுதியில் உள்ள பழமையான நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் பராமரிப்பு பணி செய்து வந்தார். இன்று காலை வழக்கமான பணிகளை முடித்துவிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்றார். இதனைத்தொடர்ந்து மீண்டும் திரும்பி வந்தபோது கோவில் வளாகத்தில் அதே பகுதியை சேர்ந்த கொம்பையா உட்பட பலர் மது அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை அவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் அவருக்கும், அங்கு மது அருந்தி கொண்டிருந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகளைப்பாக மாறியது. இதில் கிருஷ்ணனை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதனிடையே, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கிருஷ்ணனை மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் தொடர்பாக 5 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாய்த்தகராறில் கோவில் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Tirunelveli