நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி பகுதியில் வசிப்பவர் ஏஞ்சல் மரியபாக்கியம். இவர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.
அதில் தனது கணவன் தன்னுடன் நடந்த திருமணத்தை மறைத்து மேலும் இரு பெண்களுடன் திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மேலும், அந்த மனுவில் கூறியதன்படி, ஏஞ்சல் மாரிய பாக்கியத்திற்கும், குரும்பூரை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
இவர்களுக்கு அபிஷா, அஜிதா என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு மனைவியை அடுத்த துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அவரது வீட்டில் இருந்து வரதட்சணை பணமும் கேட்டு துன்புறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : நாளை மறுநாள் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராகும் உதயநிதி? - ஆளுநர் மாளிகை ஒப்புதல்?
இதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் முத்துக்குமார் குடும்பம் சமாதானம் சொல்லி அழைத்து சென்று மீண்டும் கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளனர். துன்புறுத்தல் அதிகமானதும் தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார் ஏஞ்சல் மரிய பாக்கியம்.
குரும்பூர் காவல் நிலையத்தில் 104/15, CC-55515 வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏஞ்சல் மரிய பாக்கியம் தனது திருமணத்திற்கு தாய் வீட்டில் சில 12 பவுன் நகையை மகள்களின் கல்வி தொகைக்கு உதவியாக கேட்டுள்ளார்.
அதற்கும் தர மறுத்ததால் இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவிற்கும், தனது வாழ்வாதாரத்திற்கும் DVC 2/2017 என்ற வழக்கினை தாக்கல் செய்து அந்த வழக்கின் தீர்ப்பு 30.11.2020 தேதியில் மாத செலவுத் தொகையாக ரூபாய் 9000ம், ஒவ்வொரு மாதமும் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் தரும்படி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பின்படி மாத பராமரிப்பு செலவு தொகையினை வழங்காததால் மீண்டும் கணவன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில், நாசரேத்தை சேர்ந்த மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரிகின்ற திருச்செந்தூர் வெள்ளமடத்தை சேர்ந்த அருள் அன்புச் செல்வி என்பவரை முத்துக்குமார் திருமண செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருவதாகவும், மேலும் முத்துக்குமாரின் பெற்றோர்கள் ஏற்பாட்டில் தூத்துக்குடியை சேர்ந்த டெய்சி ராணி என்பவரையும் திருமணம் செய்து கொண்டதை அறிந்த மரிய பாக்கியம் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதில் அன்பு அருள்செல்வி மற்றும் டெல்சி ராணி ஆகியோருடன் முத்துக்குமார் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.
எனவே முத்துக்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முதல் திருமண பந்தத்தை மறைத்து முறையான விவாகரத்து ஏதும் பெறாமல் ஏமாற்றி, பல பெண்களை திருமணம் செய்து கொண்டு சட்டத்திற்கு புறம்பான முறையில் வாழ்ந்து வரும் முத்துக்குமார் மற்றும் அருள் அன்பு செல்வி டெல்சி ராணி மற்றும் துணையாக இருந்த முத்துக்குமாரின் தந்தை தமிழரசன், தாயார் சாரதா மற்றும் முத்துக்குமாரின் தங்கை நித்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார்.
இந்த மனுவுடன் இரண்டாவதாக மற்றும் மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர்களின் புகைப்படங்கள் திருமணத்திற்கான ஆவணங்களையும் இணைத்து அளித்துள்ளார்.
செய்தியாளர் : ஐயப்பன் - திருநெல்வேலி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tirunelveli