தூத்துக்குடி அருகே திருமணமான 3 மாதங்களில் இளம்தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அனந்தமாடன் பச்சேரி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்: இவருடைய மகன் தங்கமுனியசாமி (வயது 28). இவர் அந்த பகுதியில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் துவரங்கை பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமிக்கும் (23), பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2 பேருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். அதன்பிறகு அனந்தமாடன் பச்சேரியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் தங்க முனியசாமியின் வீடு பூட்டியே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாபெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வீட்டில் கயிற்றின் ஒரு முனையில் தங்க முனியசாமியும், மற்றொரு முனையில் சீதாலட்சுமியும் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளனர்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தருவைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் முடிந்த நாள் முதல் இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம். நேற்று இரவு இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவருமே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 3 மாதங்களே ஆவதால் தூத்துக்குடி சார் ஆட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, Crime News, Thoothukodi