முகப்பு /செய்தி /தூத்துக்குடி / போலீஸ் கேட்டா சிசிடிவி வீடியோ தருவியா - வீடு தேடிவந்து மிரட்டிய கோழி திருடர்கள்

போலீஸ் கேட்டா சிசிடிவி வீடியோ தருவியா - வீடு தேடிவந்து மிரட்டிய கோழி திருடர்கள்

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோ

Kovilpatti | கோவில்பட்டி அருகே கோழி திருட்டு சம்பவம் தொடர்பாக சிசிடி வீடியோவை கொடுத்த குடும்பத்தை அரிவாள் வைத்து ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. அந்த சிசிடி காட்சிகளை வைத்து 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார்  விசாரணை செய்து வருகின்றனர்.  

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அத்தை கொண்டான் பகுதியில் வசித்து வருபவர் லாவண்யா. இவரது கணவர் தாமோதர கண்ணன். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் லாவண்யா அவரது தாயுடன் வசித்து வருகிறார். லாவண்யாவின் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோழி திருடு போய் உள்ளது. இதுதொடர்பாக அந்த குடும்பத்தினர் லாவண்யா வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடி காட்சிகளை  கேட்டுள்ளனர்.சிசிடிவி காட்சிகளை லாவண்யா கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நேற்று  முன்தினம் இரவு லாவண்யா வீட்டிற்கு சென்ற சிலர் அவரின் வீட்டின் வாசலில் பட்டாசை வெடிக்க வைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். சத்தம் கேட்டு வெளியே வந்த லாவண்யாவின் தாயாரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். பின்னர்  லாவண்யா வெளியே வந்து யார் என கேட்டுள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த அருவாளை கொண்டு மிரட்டி உள்ளனர். மேலும் வீட்டின் சுவர் மீது ஏறி வீட்டின் போர்ட்டிகோவில் நின்றிருந்த கார் மீதும் ஏறி போலீசாருக்கு எப்படி சிசிடிவி காட்சிகள் கொடுக்கலாம் என்று கூறி மிரட்டியுள்ளனர்.

Also see... மருத்துவமனையில் புகுந்து பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை.. அலறியடித்து ஓடிய செவிலியர்கள்- முன்விரோதத்தால் அரங்கேறிய கொடூரம்

இதுகுறித்து லாவண்யா கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் துறையினர் மகேந்திரன், மருதுபாண்டி, பூபேஷ் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: CCTV, Crime News, Thief, Thoothukodi