தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்துறை பிரிவு தலைவராக இருப்பவர் பேராசிரியர் சிவசங்கரன். அதே கல்லூரியை சேர்ந்த பி.ஏ.கணிதம் 3ஆம் ஆண்டு படிக்கும் ராமர் என்ற மாணவரும், அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்ததோடு மட்டுமின்றி இருவரின் பெற்றோருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்த போது மாணவர் ராமர், அதே கல்லூரியில் படிக்கும் சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் எப்படி காதலை பற்றி வீட்டில் சொல்லலாம் என்று கூறி வாக்குவாதம் செய்ததாகவும் அப்போது, பேராசிரியர் சிவசங்கரை 4பேரும் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் சிவசங்கரன் மயக்கமடைந்தார். இதையடுத்து அருகில் இருந்த மற்ற பேராசிரியர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மாணவர் சுரேஷ், சிவசுந்தரராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் சிவசங்கரன் கூறுகையில், மாணவர்களின் காதலை கண்டித்தேன், அதற்கு கிடைத்த பரிசு தான் எனக்கு அடி, உதை. தன்னை தாக்கிய காட்சிகள் கல்லூரியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் உள்ளதாகவும், அதனை காவல்துறை அழித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் நிர்மலாவிடம் கேட்ட போது, இப்பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். மாணவர்கள் அடித்து விட்டதாக சம்பந்தப்பட்ட பேராசிரியர் கூறியதாகவும், போலீசார் வந்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டது என்பது குறித்து தெரியாது.
Must Read : பள்ளி மாணவர்களுக்கு போதை உணர்வு தரும் மாத்திரைகள் சட்டவிரோதமாக விற்பனை.. மதுரையில் மருந்தக உரிமையாளர் கைது
இதுதொடர்பாக சுரேஷ், சிவசுந்தரராமன் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், அவர்களுக்குள்ளான பிரச்சினை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக பேராசிரியர் சிவசங்கரனிடம் எவ்வித விசாரணையும் நடத்தவில்லை என்றார்.
இப்பிரச்சினை குறித்து கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷிடம் கேட்ட போது, இது போன்ற புகார் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றும், சிசிடிவி காட்சியை காவல்துறை எதுவும் அழிக்கவில்லை. அழித்ததாக சொல்லப்படுவது பொய் என்றும் கூறினார்.
உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.